ஆப்கான்: 30 சிறுவர்களை கடத்தினர் தாலிபான்கள்

பாகிஸ்தானை சேர்ந்த 30 சிறுவர்களை தாலிபான்கள் கடத்தி சென்றுள்ளனர். 

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதி அரசு நிர்வாகத்தின் கீழ் இல்லை.தீவிரவாதிகளின் ஆதிக்கமே அங்கு ஓங்கியுள்ளது. 

இந்நிலையில் ரமலான் பண்டிகையையொட்டி வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பாஜார் என்ற பழங்குடியின பகுதியை சேர்ந்த 12 முதல் 18 வயது வரையிலான சிறுவர்கள் 30 பேர் சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது அவர்களை அறியாமல் அச்சிறுவர்கள் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துவிட்டனர்.அப்போது அங்கு பதுங்கியிருந்த தாலிபான் தீவிரவாதிகள் அந்த 30 சிறுவர்களையும் கடத்தி சென்றுவிட்டதாக உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment